Header Ads



இலங்கையின் புதிய வரைபடம்- அடுத்த வருடம் வெளியாகிறது

இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இந்த புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் எல்லைப் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினாலும் கொழும்பு துறைமுக நகரத்தினாலும் இலங்கையின் நிலப்பரப்பில் பெரியளவிலான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே இந்த புதிய வரைபடத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.