Header Ads



ரோஹின்யர்களுக்கு கல்லால் அடித்து, பௌத்தத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் - அமைச்சர் வஜிர

-JM.Hafeez-

கடலில் தத்தளித்து கரை சேர்ந்தவர்களை  கல்லால்  அடித்து பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம். விஷஜந்து ஒன்றைக் கூடக் கொலை செய்ய நினைக்காத பௌத்த தர்மத்தைப் பின்பற்றும்  நாம் கடலில் தத்தளித்து கரை சேர்ந்த வர்களை  கல்லால்  அடிக்க முற்படுவது தவறாகும். அவ்வாறு பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என உள்நாட்லுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். (28.9.2017 மாலை)

கண்டி மலைநாட்டு கலைச்சங்க மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் கடமை புரியும் நிர்வாக உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்விலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-

மியன் மாரில் இருந்து இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில்  அகதிகளாக பலர் வந்துள்ளனர். சர்வதேச சட்டங்களின் படி அவர்ககளுக்கு அதற்காகன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. தமது உயிரைக் காப்பாற்ற பயணம் செய்யும் போது நடுக் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டவர்கள். ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானங்களுக்கு அமைய அவர்களை வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பப்பட உள்ள நிலையில் இவ்வாறு கலகம் விளைவிப்பது வரவேற்கத்ததக்கதல்ல.

பெளத்தர்களான நாம் எமது வீடுகளுக்கு பாம்பு அல்லது ஏதேனும் விஷ ஜந்து கூட வந்து விட்டால் அது எமக்கு ஒத்து வராத ஒன்று எனக் கருதும் போது அதற்குறிய இடத்திற்கு அதனை அனுப்பி விடுவோம். பாம்பு, யானை போன்ற வற்றை காட்டில் கொண்டு போய் கைவிடுவோம். அதுதான் மனிதாபிமானம்.

அதேவிதம் கடலில் தத்தளித்தவர்கள் எந்த இனமானாலும் அவர்கள் உயிருக்குப் பொரடும் போது அவர்களுக்கு அபயம் அளிப்பதே மரபு. அதனை மீறி நாம் நடந்து கொண்டால் எம்மை எத்தகைய ஒரு பிறவியாக சர்வதேசம் கருதும். எனவே இப்படியான விடயங்களுக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

கண்டி மாவட்டத்தில் வினைத்திறன்  போட்டிகளில் வெற்றிபெற்ற பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அதிபாரிகள் போன்றவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களையும் வழங்கினார்.   

1 comment:

  1. பெளதத்திற்கு இழுக்கு ஏற்பட்ட பின்னர் இதனைப்பேசி பயனில்லை....

    ReplyDelete

Powered by Blogger.