Header Ads



போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ,பொன்சேகாவே பொறுப்பு – ஜெனரல் ஜயசூரிய

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் போர்க்குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள அவர், கொழும்பு திரும்பிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே  இதனைத் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜெனரல் ஜயசூரிய, இந்தக் குற்றங்களுக்கு தான் உதவியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்றால், அந்தப் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உள்ளது. ஏனென்றால் அவர் தான் அப்போது இராணுவத் தளபதியாக இருந்தார் என்றும் ஜெனரல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.