Header Ads



மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக மிகப்பெரும் மனிதப் படுகொலை (இதுவரையான தகவல்கள்)


கடந்த மாதம் 25 ம் திகதி முதல் இதுவரை (10 நாட்களில்) மியன்மாரில் முஸ்லிம்கள் வாழும் 3 நகரங்கள் உட்பட 140 ற்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

#3500 ற்கும் மேற்பட்டோர் சுட்டு, வெட்டி, அடித்து, எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

#சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இவர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்களாதேசிற்குள் நுளைந்துள்ளனர்.

#சுமார் 87000 பேர்கள் பங்களாதேஷ் எல்லையில் தடுக்கப்பட்டுள்ளனர்.

#20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆங்காங்கே சிக்குண்டுள்ளதாகவும் இவர்களில் அதிகாமான குழந்தைகள் உணவு மருத்துவமின்றி இறந்து வருவதாகவும் ரோஹிங்யாவிலிருந்து வரும் தகவல்கள் புலப்படுத்துகின்றன.

#இடம்பயர முயற்சித்த பல்லாயிரக்கணக்கான அகதிகளை தற்போது மியன்மார் இராணுவத்தினர் ஆயுத முனையில் தடுத்து வைத்துள்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#மனித குலத்திற்கெதிராக நடந்தேறும் இந்த அநியாயத்தை நிறுத்தக்கோரி உலகின் பல நாடுகளிலும் கண்டனப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

-Abu Arya-

No comments

Powered by Blogger.