Header Ads



மைத்திரி நாளை நியூயோர்க் பயணம், செவ்வாயன்று ஐ.நா.வில் உரை

மைத்திரிபால சிறிசேன, வரும் 19ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடர், தற்போது நடந்து வருகிறது.

இதில், வரும் 17ஆம் நாள் தொடக்கம், 23 ஆம் நாள் வரை உலகத் தலைவர்கள் உரையாற்றும் அமர்வு இடம்பெறவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் உரை, வரும் 19ஆம் நாள் மாலை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், நாளை கொழும்பில் இருந்து அமெரிக்கா புறப்படவுள்ளனர்.

ஐ.நா பொதுச்சபையில்  மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.

No comments

Powered by Blogger.