Header Ads



ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக, மிளகாய் பொடியை பயன்படுத்தும் இந்திய இராணுவம்


ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசிலிருந்து இந்தியாவுக்குள் வருவதனை தடுப்பதற்காக எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையதிகாரிகள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அங்கிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர். 

இந்தநிலையில் பங்களதேசிலிருந்து இருந்து இந்தியாவுக்குள் நுழைய ரோஹிங்கியா அகதிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் அகதிகள் என்ற போர்வையில் பாகிஸ்தானின் . உளவாளிகளும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் மேற்குவங்கத்துக்குள் ஊடுருவ முயற்சிக்கின்ற அகதிகளை தடுக்க மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் உருவ தோற்றத்தில் அகதிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஆயுதங்களால் அகதிகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க இவ்வாறு மிளகாய்தூள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.