Header Ads



நாட்டின் பல பகுதிகளில் மின் தடை

மின்சார சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையினை வழமைக்கு கொண்டு வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு நாளை 12 மணிக்குள்  தீர்வினை பெற்றுத்தராவிடின் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் நேற்று நண்பகல் 12 மணிமுதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.