Header Ads



இளம் பெண்களை, கடத்தி விபச்சாரம்

இளம் பெண்களை கடத்தி விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதியிலுள்ள பெண்களை கடத்தி வந்து செல்வந்தவர்களுக்கான பாலியல் நடவடிக்கைக்காக இவர்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக அதிகளவு பணம் பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் எத்துல்கோட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த இரவு விடுதி சுற்றவளைக்கப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான யசிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது . இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இரவு விடுதிக்காக கடத்தப்பட்ட இந்த சிறுமி அங்கு சேவையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரவு விடுதிக்கு பாரிய அளவு பணம் செலுவிட கூடியவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர். முதலில் மதுபான விருந்து வழங்கப்பட்டதன் பின்னர் இளம் வயதுடைய பெண்களிடம் சேவை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் அந்த விடுதியின் மேல் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் விடுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இளம் பெண்கள் ஐவர் மற்றும் முகாமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.