ஆற்றுப் பகுதியில் வசிக்கும் மக்கள், அவதானமாக இருங்கள்
கங்கைகளுக்கு அருகில் இரு மருங்கிலும் வசிக்கின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
இதேவேளை நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை இன்றைய தினத்தின் பின்னர் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது.
Post a Comment