தனியார் பஸ் கடத்தப்பட்டது
மதுகம நகரத்தில் இன்று (27) தனியார் பஸ் கடத்தப்பட்டுள்ளது. WP NA -5408 என்ற இலக்கப்பலகையைக் கொண்ட தனியார் பஸ் ஒன்றே, மதுகம நகரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப்போது, கடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பயணிகள் எவரும் பஸ்ஸில் இருக்கவில்லை என, தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் இன்று (27) காலை 8.30 மணியளவில் பாணந்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் பஸ்ஸை கண்டுப்பிப்பதற்கு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment