Header Ads



இலங்கையின் தற்போதைய, பிரச்சினை இதுதான்..!

இலங்கை அணிக்கு நல்ல திறமை இருக்கிறது, ஆனால் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது என மேத்யூஸ் கூறியுள்ளார்.

இலங்கை அணி தலைவர் பதவியிலிருந்து மேத்யூஸ் கடந்த யூலை மாதம் விலகினார். அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அது குறித்து மேத்யூஸ் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், எல்லோரையும் விட இலங்கை அணி வீரர்கள் தொடர் தோல்வியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதே அணியை வைத்து கொண்டு இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் 322 ஓட்டங்கள் என்ற இலக்கை தொட்டு வெற்றி பெற்றோம்.

எங்களிடம் திறமை இல்லாமல் இல்லை. ஆனால் அணியினரிடம் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிய ஆறு வீரர்கள் காயம் காரணமாக இந்தியாவுடனான தொடரில் விளையாடவில்லை.

இது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோற்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

இலங்கை தொடர் தோல்வியடைந்து வரும் நிலையில், ஒரே ஒரு வெற்றி தற்போது எங்களுக்கு தேவைப்படுகிறது.

அது மட்டும் கிடைத்தால் நிச்சயம் அணிக்கு பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும் என மேத்யூஸ் கூறியுள்ளார்.

1 comment:

  1. இன்றைய போட்டியிலாவது அந்த ஒரு வெற்றி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கிறோம்..

    ReplyDelete

Powered by Blogger.