Header Ads



பெண்­களின் உடை­ய­ணிந்து, நட­மா­டி­ய இரா­ணுவ வீரர் கைது - பண்­டா­ர­வளையில் சம்பவம்

பெண்­களின் உடை­ய­ணிந்து இரவு நேரத்தில் பண்­டா­ர­வளை நகரில் காணப்­பட்ட ஆண் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக பண்­டா­ர­வளை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கடந்த சனிக்­கி­ழமை இரவு சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் நட­மா­டி­யமை தொடர்பில் கிடைத்த முறைப்­பாட்­டுக்­க­மைய அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இச்­சந்­தே­க­நபர் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றி­வரும் ஊவா ­ப­ர­ண­கம மெத­வெல  உடு­கிந்த பிர­தே­சத்தைச் சேர்ந்­த 23 வய­தா­னவர் என தெரி­ய­வந்­துள்­ளது. சந்­தேக நபரின் கைத்தொலை­பே­சியை சோத­னை­யிட்­ட­போது அதி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான ஆபா­சப்­ப­டங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­ந­ப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைக்­களின் போது  தான் பார்த்த ஆபாசப் படங்­க­ளிலுள்ள பெண்­களைப் போன்று தனக்கும் உடை­ய­ணிந்து கொள்­வ­தற்கு ஆசை ஏற்­பட்­ட­தனால் இவ்­வாறு பெண்கள் போன்று ஆடை­ய­ணிந்து இரவில் உலா­வந்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் பண்­டா­ர­வளை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்ட வேளையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

No comments

Powered by Blogger.