Header Ads



‘மைத்திரி தாத்தா’ எனக்கூறி, அவரை நோக்கி ஓடிச்சென்று மடியில் அமர்ந்து கொண்ட சிறுமி

ஜனாதிபதியை நோக்கி ‘மைத்திரி தாத்தா’ (மைத்திரி சிய்யா) எனக் கூறி அவரை நோக்கி ஓடிச் சென்று மடியில் அமர்ந்து கொண்ட சிறுமி

கவுடுல்ல பிரதேச கிராமமொன்றில் நேற்று இடம்பெற்ற மீன்பிடி வலை மற்றும் படகு விநியோக நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்த போது அரிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த தனுல்யா என்ற  சிறுமியொருவர் தனது பெற்றோருடன் இந்நிகழ்வுக்கு சென்றுள்ளார். 

அதன்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை கண்டதும் அச் சிறுமி ''மைத்திரி சிய்யா'' (மைத்திரி தாத்தா) என கூச்சலிட்டுக் கொண்டு ஜனாதிபதியை நோக்கி செல்வதற்கு முயற்சித்த வேளையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் அவளைத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில்,  அதனை அவதானித் துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உடனடியாக தனது பாது காப்பு பிரிவினரை அழைத்து அச் சிறுமியை அனுமதிக்குமாறு கூறி யுள்ளார்.

பின்னர், பாதுகாப்பு பிரிவினர் இடமளித்ததையடுத்து குறித்த சிறுமி ஓடிச் சென்று ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்டு நிகழ்வு நிறைவடையும் வரை அவருடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.