இலங்கையிலுள்ள ரோஹின்ய அகதிகளை பாதுகாக்க, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்
ரோஹின்ய அகதிகள் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை கையாண்டு வரும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அகதிகள் யு.என்.எச்.ஆர்.சி. இன் அனுசரணையுடன் பொலிசாருக்கு முறையாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டே கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க சட்டபூர்மவாகவே முன்னெடுக்கப்பட்டன.
இந் நிலையில் இதனை எவராலும் எதிர்க்க முடியாது. இவர்களில் 16 சிறுவர்களும் 7 பெண்களும் இருக்கிறார்கள். இந்த அகதிகளைப் பாதுகாப்பது பொலிசாரின் கடமையாகும். இந்த அகதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாம் விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்'' என்றார்.
Post a Comment