Header Ads



"சந்தோசமாக மக்கள் வாழ்கிறார்கள் என, காண்பிக்க அரசாங்கம் முயற்சி"

வாழ்க்கைச் செலவு குறித்து ஊடகங்களில் அம்பலப்படுத்தப்படுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் தற்போது வாழ்க்கைச் செலவு துரித கதியில் அதிகரித்துச் செல்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு வாழ்க்கைச் செலவு உயர்வடைந்த போதிலும் அது குறித்து ஊடங்களில் அம்பலப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரிசி, மரக்கறி, தேங்காய் போன்றவற்றின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகவும் எனினும் இந்த விடயம் குறித்து ஊடகங்கள் மௌனம் காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் இந்த விடயத்தை அம்பலப்படுத்தாவிட்டாலும், மக்கள் வாழ்க்கைச் செலவு பிரச்சினையை புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்கள் சந்தோசமாக வாழ்கி;ன்றார்கள் என காண்பிக்க முயற்சிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.