Header Ads



"ரணில் உங்­க­ள் நண்பர்தானே" எனக்கூறி மகிந்தவுக்கு நெத்தியடி கொடுத்த சம்பந்தர்

புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பு அவ­சியம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆத­ரவை தெரி­விக்க வேண்டும் என அவ­ரிடம் கேட்­டுக்­கொண்டேன் எனவும் மாநா­யக்க தேரர்­களை விரைவில் சந்­தித்து அர­சியல் அமைப்பு குறித்து பேச­வுள்­ள­தா­கவும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று பின்­னி­ரவு இடம்­பெற்ற செய்தி ஆசி­ரி­யர்கள் சந்­திப்பின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இடம்­பெற்ற சந்­திப்பு தொடர்பில் வின­வி­ய­போது அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

"அவ­ரது இல்­லத்தில் நான் சந்­திப்பை முன்­னெ­டுத்தேன், அதன்­போது அவர் தன்னை சிறையில் தள்­ளு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்று கூறினார். அப்­போது ரணில் உங்­க­ளு­டைய நண்பர் தானே என்று நான் கூறினேன். அதன்­போது ரணில் நண்பர் தான். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கிறார் என்று சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் இந்த அர­சியல் அமைப்பு விட­யத்தில் அனை­வ­ரதும் ஆத­ரவு எமக்கு வேண்டும். அதற்கு ஆத­ர­வாக இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை எதிர்க்­காது இருந்தால் அது எமக்கு உத­வி­யாக இருக்கும் என்றேன்,இவ்வாறு சிநே­க­பூ­ர்­வ­மாக இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது"

கேள்வி:- தீர்வு திட்டம் தொடர்பில் மாநா­யக்க தேரர்­களை சந்­திக்க திட்டம் உள்­ளதா?

பதில்; ஆம், அவ்­வா­றான ஒரு திட்டம் உள்­ளது, ஒரு­மித்த நாட்­டுக்குள் ஒரு அர­சியல் தீர்வு வேண்டும் என கோரு­கின்றோம், அதை ஏன் நீங்கள் ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­றீர்கள் என்­பதை அவர்­க­ளிடம் கேட்க வேண்டும். பெளத்த மதம் இந்த நாட்டில் பிர­தானம் என்­ப­தற்கு நாம் இணங்­கத்­தயார். ஆனால் ஏனைய மதங்­களும் ஏற்­று­க் கொள்­ளப்­பட வேண்டும். பாதகம் ஏற்­ப­டாத வகையில் சில விட­யங்­களை விட்­டுக்­கொ­டுப்­பதில் பாதிப்பு இல்லை. ஒட்­டு­மொத்­த­மாக நாம் தீர்வை நோக்கி சிந்­திக்க வேண்டும். தேசிய ரீதி­யிலும், மாகா­ண­மட்ட அதி­கார பகிர்வு, உள்­ளூ­ராட்சி மட்ட அதி­கா­ர­ங்கள் என மூன்று அடிப்­ப­டையில் அமையும். இந்த அதி­கா­ரங்­களை அந்­தந்த மட்­டத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு மக்­க­ளுக்­கான பூரண சுதந்­திரம் அமைய வேண்டும் என்­ப­தையே நாம் கோரு­கின்றோம். அவ்­வா­றான ஒரு தீர்வு வர­வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் அது தீர்வே அல்ல.

கேள்வி:- கோத்­தா­பய ராஜபக்ஷவின் புதிய வியூகம் தொடர்பில் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்?

பதில்:- அவ­ரது கூட்­டத்தின் பின்னர் எந்த கருத்தும் வெளி­வ­ர­வில்லை, இந்த கூட்­டங்கள் மஹ­ர­கம பகு­தியில் இடம்­பெற்­றன. மக்கள் அதிகளவில் பங்குபற்றியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் எந்த காரணிகளும் இல்லை. ஆனால் இது குறித்து நாம் ஆராய்ந்த போது இது பெரிய வெற்றியை பெறாது என கூறுகின்றனர். ஆகவே பொறுத் திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.

No comments

Powered by Blogger.