Header Ads



பிர­பா­க­ர­ன் ஒரு வீரர், அவருக்கு நினை­வுத்­தூபி அமைப்பதில் பிரச்­சினை இல்லை - ஞான­சாரர்

ராஜபக்ஷ அர­சாங்கம் யுத்­தத்தின் மூலம் புலி­களை வெற்றி கொண்­ட­போதும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­ தற்கு எந்த வேலைத்­திட்­டமும் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு  நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லை என்று பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா கட்சி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

30 வருட யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு மஹிந்த ராஜபக்ஷ் எடுத்த அர­சியல் தீர்­மா­னத்தை யாரும் மறக்க முடி­யாது. எந்த அர­சியல் கொள்­கையில் இருந்­தாலும் நாட்டு மக்கள் அவ­ருக்கு நன்­றி­யு­டை­ய­வ­ராக இருக்­க­வேண்டும். அது வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மான தீர்­மா­ன­மாகும். அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் அழுத்­தங்கள் மற்றும் உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலே அவர் இந்த தீர்­மா­னத்தை எடுத்து யுத்­தத்தை வெற்­றி­கொள்ள தலை­மைத்­துவம் வகித்தார்.

அத்­துடன் மஹிந்த ராஜபக்ஷ் வாழ்நாள் முழு­வதும் இந்த நாட்டில் அர­ச­ராக இருக்­க­வேண்­டி­யவர். என்­றாலும் அது நடை­பெ­ற­வில்லை. ஏனெனில் அவரை சுற்­றி­யி­ருந்த ஆலோ­ச­கர்கள் சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருந்தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. அவரின் தோல்­வி­யுடன் நாடும் நிலை­யான நிலைப்­பாட்டில் இருந்து விழுந்­துள்­ளது.

விடு­த­லைப்­பு­லி­களை யுத்­தத்தின் மூலம் தோல்­வி­ய­டை­யச்­செய்­தாலும் அவர்­களால் சமூ­க­ம­ய­மாக்­கி­யுள்ள பிரி­வி­னை­வாத நிகழ்ச்சி நிரலை தோற்­க­டிக்க முடி­ய­வில்லை. அதே­போன்று அதன் அர­சியல், சர்­வ­தேச முன்­ன­ணி­களை தோற்­க­டிக்க முடி­யாமல் போயுள்­ளது.  

உண்­மை­யான விடு­த­லைப்­பு­லிகள் வடக்கில் இல்லை. சர்­வ­தே­சத்­திலே இருக்­கின்­றனர். அவர்கள் சொல்­வ­தையே பிர­பா­கரன் இங்கு மேற்­கொண்டார். ஆனால்  எங்­களால் சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை.

வடக்கில் யுத்தத்தின் மூலம் புலி­களை வெற்­றி­கொண்ட பின்னர் அங்கு அடிப்­படை வச­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டன, பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. ஆனாலும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு அன்று அர­சாங்­கத்­திடம் எந்த வேலைத்­திட்­டமும் இருக்­க­வில்லை.  

என்­னதான் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டாலும் மக்­களின் உள்­ளத்தை மாற்­று­வது இல­கு­வான விட­ய­மல்ல. அன்று மஹிந்த ராஜ­பக்ஷ்­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­ப­வர்களாக நாங்கள் இருந்­தி­ருந்தால் துட்­டகைமுனு மன்­னனின் முன்­மா­தி­ரியை பின்­பற்­று­மாறு தெரி­வித்­தி­ருப்போம்.  அத்­துடன் தேசிய ஒற்­று­மையை பாது­காத்­துக்­கொள்ளும் பொருட்டு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்­காக  நினை­வுத்­தூபி ஒன்றை அமைப்­பதும் பிரச்சினை இல்லை.  

ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ் இங்குள்ள மக்களுக்கு வீரர்போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை. யுத்த வெற்றி விழாக்களை கொண்டாடவேண்டும். நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு அந்த மக்களின் உரிமையையும் பாதுகாக்கவேண்டும் என்றார். 

8 comments:

  1. இனத்தால் வேறுபட்டாலும், குணத்தால் ஒற்றுமைப்படும் இருவரில், ஒருவர் மற்றவரை பற்றி புகழ்ந்து பேசுவதில் என்னதான் அதிசயம் இருக்கிறது.

    எப்படி இருந்தாலும், ஜனாசார குசு இட்டாலும் அதை செய்தியாக பிரசுரித்து அவனை பிரபல்லியம் அடைய செய்வதில் நமது ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.

    வாழ்க தமிழ் ஊடகங்களே.....

    ReplyDelete
    Replies
    1. ஞானசேர தேர்ரின் policy "எதிரிக்கு-எதிரி நண்பன்" என்பது போல.

      Delete
    2. ஞானசேர தேரரே, நீங்கள் வட-கிழக்கை இணைக்க ஒத்துழையுங்கள், பார்கலாம்.
      Deal?

      Delete
    3. எதிரிக்கு எதிரி நண்பன்தான், ஆனாலும் நீங்க இருவரும் எப்பவுமே எதிரிகள்தான்...

      Delete
  2. எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். மொழியால் ஒன்று பட்டாலும் மதத்தால் ஈரினங்கள்.தமிழர்களை ஒரு கையில் பார்த்து விட்டோம்.அப்பொழுது முஸ்லிம்கள் நல்லவர்கள். இப்பொழுது முஸ்லிம்களை ஒரு கையில் பார்த்து விட்டு கடைசியில் ஈரினங்களையும் வேரோடும் வேரடிமண்ணோடும் இல்லாதொழிப்போம்.இதை ஈரினத்தவர்களும் சம காலத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Yes you are right, otherone is Batticaloa Sumangala thero
      Now they are pretending like Tamil supporters. These ppl have to be eliminated from this society.
      Muslins also shoyld realize the way the govt hace treated the Tamis in past & present.
      There is no point closing the eyes and support whatever the majority says.
      All the ethnic and religion ezpress the same justice. So we don't need to wait till it happened to us,even if there is any violence we have to give tge justice and ww hv to be neutral.

      All the community should realize that whatever we do,the same will haplen to us also

      Delete
  3. ஞானத்திற்கு ஞானம் பிறந்திடுச்சுடோய்

    ReplyDelete
  4. நீ இன்னும் இங்கதான் இருக்கியா?
    சொல்லவே இல்ல.இரிடா...என் வெண்று..

    ReplyDelete

Powered by Blogger.