’கிரிக்கெட்டை நீங்கள் பொறுப்பேற்கவும்’ - பிக்குகளிடம் கெஞ்சிய அர்ஜுனா
“கிரிக்கெட் விளையாட்டை காப்பாற்ற ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அஸ்கிரிய, மல்வத்துபீட பிரதம பிக்குமார்கள், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என, அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலும், கிரிக்கெட்டை பொறுப்பேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மகாநாயக்க தேரர்களை அண்மையில் சந்தித்து ஆசி பெற்றபோதே, இதனைத் தெரிவித்தனர் என, அமைச்சால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தெரிவித்தது.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த அமைச்சர், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைள் பற்றியும், அதன் எதிர்கால செயற்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
“கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பாக, சில மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டும். கிரிக்கெட் நிர்வாகமே பிரச்சினையாக உள்ளது. நாட்டில் நீதியுள்ளது. அதன்படி செயற்படவேண்டும். கிரிக்கெட்டின் எதிர்கால நலன் கருதி, சில நடவடிக்கைகள் மேற்டிகொள்ளவேண்டியுள்ளது” என்று, அஸ்கிரிய மகாநாயக்க தேரர், அமைச்சரிடம் தெரிவித்தார் என்று, அந்த ஊடக அறிக்கை தெரிவித்தது.
Well said.good luck for our srilanka team
ReplyDeletethalappukkum, seythikkum ner muran.
ReplyDeleteHa ha ha ha..,..
ReplyDelete