ரோஹின்யா முஸ்லிம்களுக்காக மன்னார் + மாத்தளை தமிழ மக்கள் வீதிக்கு வருகிறார்கள்..!!
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டு அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 5ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2
மியன்மாரில் நடந்து வருகின்ற ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன படுகொலையை கண்டித்தும், தமிழ் நாடு அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான இந்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மாத்தளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இடம்பெறும். கண்டனத்தை தெரிவிக்க மனித நேயமிக்கவர்கள் ஒன்றுக்கூடுவோம்.
ஏற்பாடு:
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு - மாத்தளை மாவட்டம்
Post a Comment