அப்பம் தின்று, தேநீர் குடித்ததை வைத்து என்னை அவமானப்படுத்தினர் - ஜனாதிபதி
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 66 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரபலமான அப்பம் உண்ட கதை விவகாரத்துக்கு விளக்கமளித்துப் பேசினார்.
நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,
அப்பம் உண்டு தேநீர் குடித்த கதை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மிக பிரபலமான ஒன்றாக மாறியதுடன் என்னை அவமதிப்பதற்கு கூறும் கதையாகவும் மாறியது.
ஆனால் அப்பம் உண்ட அன்றைய தினத்தில் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள் சகலரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது முன்னாள் ஜனாதிபதி நாம் தேர்தலுக்கு செல்வோம் என்றார். ஒருவரும் வாய்திறந்து பதிலளிக்கவில்லை. அப்போதும் நான் தேர்தலுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினேன்.
அப்போது கட்சியில் வாய்திறந்து பேச சுதந்திரம் இருக்கவில்லை. கட்சியினுள்ளே ஜனநாயகம் இருக்கவில்லை. அப்போது வாய் திறக்காதிருந்தவர்கள் இன்று கட்சியினுள் சுதந்திரம் இருக்கின்ற போது அதனை விமர்சிக்கின்றார்கள் என்றார்.
Post a Comment