"மகாநாயக்கர்கள், மகாசங்கத்தின் ஆலோசனைப்படியே நாட்டை நிர்வகிக்க வேண்டும்"
நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அமரபுர பீடத்தின் மகாநாயக்கரான கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில் நேற்று அலரி மாளிகையில் நடந்த ஆயிரக்கணக்கான பிக்குகளுக்கு தானம் அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தின் ஆலோசனைப்படியே நாட்டை நிர்வகிக்க வேண்டும். பௌத்த மதத்தில் கூறப்பட்டுள்ள தம்ம போதனைகளின் அடிப்படையில் தான், பௌத்த மதகுருமார் தமது ஆலோசனைகளை வழங்குவர்.
மகாசங்கத்தின் ஆலோசனைப்படி தான் டி.எஸ்.சேனநாயக்க ஆட்சி நடத்தினார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மகிந்த ஜனாதிபதியின் காலத்திலும் மகாசங்கதின் ஆலோசனைப்படி தான் ஆட்சி நடந்ததா ? அன்று வாயையும் மற்றும் அதையும் பொத்தி இருந்தவர்கள் எல்லாம் இப்போது கம்பு எடுத்தவன் எல்லாம் தலைவன் என்றாகி விட்டது
ReplyDeleteஅபபடின்னா நாடு உருப்பட்ட மாதிரிதான்.
ReplyDeleteஞானசாரையும் பௌத்த மதகுருதான் 26/9/2017 அன்று கொழும்பில் அகதி அனாதைகளாக வாழும் ரோகின்கியர் மக்களை கொலை செய்ய திட்டம்மிட்டவர்களும் மதகுருதான் இவர்கள் செய்யும் இந்த கீழ்தரமான அநியாயங்களை செய்யும்படி உங்களின் மகாநாயக்க தேரர்களின் சங்கம்தான் அனுமதி கொடுத்ததா அல்லது இவ்வாறு மக்களும் அனியாயம் செய்யுமாறு புத்தபகவான் ஏவினாரா? இந்த அநியாயங்களை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை?
ReplyDelete