Header Ads



பௌத்தர்கள் கொடுமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது - மஹிந்த

நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய அரசாங்க ஆட்சியில் நாடு இருண்ட காலத்தை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய காலத்தில் பௌத்தர்கள் நெருக்குதல்களையும் கொடுமைகளையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் பௌத்தர்களுக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.