Header Ads



‘அறிவில்லாத கிழவனான டிரம்பை, கடும் தாக்குதல்களால் அடக்கி காட்டுவேன் - வடகொரியா ஜனாதிபதி

வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்குவேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் யோங் உன் சவால் விடுத்துள்ளார்.

வட கொரியா 6-வது முறையாக அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை நேற்று அறிவித்தது.

இப்புதிய தடை மூலம் வட கொரியா அணு ஆயுத பரிசோதனை செய்வது தாமதமாக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது.

வட கொரியா ஜனாதிபதியான அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்க ஊடகத்திற்கு அனுப்பியுள்ளார்.


அதில், இருக்கையில் அமர்ந்தவாறு ஒரு காகிதத்தை வைத்துவாறு கிம் யோங் உன் இடம்பெற்றுள்ளார்.

அறிக்கையில், ‘அறிவில்லாத கிழவனான டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்கி காட்டுவேன்.

டொனால்ட் டிரம்ப் பின் விளைவுகளை சிந்திக்காமல் வட கொரியாவை சீண்டி வருகிறார்.

டிரம்பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அவர் கற்பனையிலும் எண்ண முடியாத முடிவுகளை சந்திப்பார்.

இது தொடர்பாக நாங்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு.பட்டுச்செத்து மடிவதற்கு நாம் தயாராவோம்.மட்டுமல்ல மனிதர்களால் ஆளப்படும் இப்பாருலகம்!

    ReplyDelete

Powered by Blogger.