Header Ads



முரளிதரனுக்கு நேர்ந்த அவலம்

முத்தையா முரளிதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்த பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பில்  விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தலையிடுமாறு, மல்வத்து பீட மகாநாயக்க தேரரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு  கருத்து  தெரிவித்த போதே  முரளிதரனின் தந்தை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டதாகவும்  தற்போது அந்தப் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில்  விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி   நடவடிக்கை எடுப்பதாக மகாநாயக்க தேரர் உறுதியளித்துள்ளதாகவும்   முரளிதரனின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.