Header Ads



கொழும்பில் ரோஹின்யர்களை தாக்கிய, பெண் கைது


மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கல்கிஸை பிரதேசத்தில் உள்ள நிலையத்துக்கு முன்பாக, பௌத்த தேரர்கள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அகதிகள் 30 பேரும் கல்கிஸை பொலிஸாரின் பொறுப்பின் கீழ், செவ்வாய்க்கிழமை (26) கொண்டுவரப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் பூஸ்ஸ  முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், மற்றுமொரு சந்தேகநபர், நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. தாக்கிய பெண் இல்லை அவள் பேய்.

    ReplyDelete

Powered by Blogger.