Header Ads



ரோஹின்யாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையே நடக்கிறது - வங்காளதேசம்

ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிருக்குப் பயந்து அங்கிருந்து கால்நடையாகவும், படகுகள் மூலமாகவும் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடையத் தொடங்கினர். அங்கு சுமார் 3 லட்சம் மக்கள் சென்று அடைந்து விட்டனர். அவர்கள் அங்கு காக்ஸ் பஜார் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தருவதற்கு 77 மில்லியன் டாலர் (சுமார் ரூ.500 கோடி) தேவை என ஐ.நா. சபை கூறுகிறது. வங்காளதேசம் மிகவும் நெருக்கடியான நிலையை சந்தித்து உள்ளது.

இந்நிலையில் வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது இனப்படுகொலை என சர்வதேச நாடுகள் கூறுகின்றன. நாங்களும் அதனைதான் சொல்கிறோம்,” என்றார். ரோஹிங்யாக்குள் அரசியல் தீர்வு, மனிதநேய உதவிக்கு மேற்கத்திய நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் ஐ.நா.சபை பிரதிநிதிகளை முகமது அலி சந்தித்து பேசிஉள்ளார். “இப்போது இது ஒரு தேசத்தின் பிரசனையாகும்,” என கூறிஉள்ளார்.

இதற்கிடையே இப்போது மியான்மரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பெங்காலி பயங்கரவாதிகள் என மியான்மர் போலி பிரசாரம் செய்வதாகவும் சாடிஉள்ளார் முகமது அலி. ராகினே மாகாணம் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியாகும், அரபு மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்த பகுதியாகும் என கூறிஉள்ளார். ஆகஸ்ட் 25-ம் தேதி போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து மியான்மர் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கையானது பழிவாங்கும் நடவடிக்கையாகும். அனைத்து மக்களையும் கொல்ல வேண்டும்? அனைத்து கிராமங்களும் எரிக்கப்பட வேண்டும்? இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிஉள்ளார் முகமது அலி.

இவ்விவகாரத்தில் வங்காளதேசம் அமைதியான தீர்வையை கோருகிறது, மியான்மருக்கு எதிரான போரை கிடையாது எனவும் குறிப்பிட்டு உள்ளார். “நாங்கள் பிரச்சனையை உருவாக்கவில்லை. மியான்மரில் பிரச்சனை தொடங்கி உள்ளதால் அவர்கள்தான் அதனை சரிசெய்ய வேண்டும். நாங்கள் அவர்களுக்கு உதவ தயார் என கூறிவிட்டோம்.” என கூறிஉள்ளார். 

No comments

Powered by Blogger.