காத்தான்குடியில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
(S.சஜீத்)
காத்தான்குடி இஸ்லாமிக் சென்டரன் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று (02) சனிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக காலை 06.15 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது மௌலவி. ஜிப்ரி (மதனி) அவர்களாள் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்L பெருநாள் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. மேலும் அவரது உரையில் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவலைக்கிடமாகவுள்ள மியன்மார்மக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் எடுத்துக்கூறி அவர்களுக்காக தற்தமது கைகளை ஏந்தி துஆப்பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர்.
மேலும் பல ஆயிரக்கனக்கான மக்கள் தொகை இப்பெருநாள் தொழுகையின் போது கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.
Post a Comment