Header Ads



நீயுமில்லை, இனி யாருமில்லை..!

-அஸாத் எம் ஹனிபா-

உனது வெற்றுடல் புதைக்கப்பட்டுள்ள 
கப்று குழிக்குள் வந்து 
தனியாக கதைக்க வேண்டும் 
இங்கே எல்லாமே மொத்தமாக விற்று 
முடிந்து விட்டதென்று!
கவலை வேண்டாம்
எல்லோருக்கும் இலாபமுள்ள வியாபாரம் -
எமது அரசியல்!

பதினேழு ஆண்டுகளாக 
நாங்களும்
உன்னை போலவே மண்ணறையில் தான் தூங்கிக்  கொண்டிருக்கின்றோம் 
எங்கும் எதிலும் காரிருள்
உன் அரசியல் வாரிசுகளின் மனதை போல!

வான்வெளியில் 
உன்னை வெடி குண்டு வைத்து எரித்து துண்டு துண்டுகளாய் சிதறடித்து படுகொலை செய்தவர்கள் 
உன் ஆத்மாவையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்

காவியுடை எம்மை 
துரத்தி துரத்தி
துவம்சம் செய்த போது
உன் கபன் புடைவை 
எமக்கு ஞாபகம் வந்தது

உனக்கு 
தீகவாவி சூத்திரம் மட்டும் தான் 
தீர்த்து வைக்க முடிந்தது ஆனால் 
எமது 
பொத்துவில் காணி பரப்பிலிருந்து மறிச்சுக்கட்டி நிலம் வரை 
தட்டிப் பறித்து
மறித்து வைத்துள்ள சேதி காற்றில் கூட வரவில்லை;
இங்கு புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்பு எல்லைகளாக வைத்திருப்பதை நீ அறிவாயா?

இத்தனைக்கும் 
முட்டுக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் 
உன் பெயரால் வாழும் ஒட்டுண்ணிகள் தான்!

உனது பாசறையில் வளர்ந்தவர்கள் என்று ஊளையிட்டு கொண்டிருப்பவர்கள் 
உன் இலட்சிய இலக்கு-
அவர்களின் 
கழிவறை அசுத்தம் 
என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் !

இன்னொரு கதை கேள்;
வடக்கும் கிழக்கும் பிரிந்து கிடப்பதைக் காண்பதற்கு
உனக்கு கொடுத்து வைக்கவில்லை 
நிலம் மட்டுமல்ல
மனசுகளும் தான்!

நீ விட்டுச் சென்ற தலைமையகத்தில்
ஊத்தையும் மந்தையும் மட்டுமே நிறைந்துள்ளது !

சிங்கம் இருந்த கதிரையை
இன்று 
அசிங்கம் அபகரித்து வீற்றிருப்பதை 
நீ அறியாய் 

நீ இல்லாத 
இந்த இனவாத தீவில் எம்மை மீட்பதற்கு  இனி யாருமில்லை - நாங்களும் 
உன்னோடு இல்லை!

3 comments:

  1. It's our real situation. Allah will help us.

    ReplyDelete
  2. For True Muslim Allah is always there.. It is wrong g statement to say as in the article. Please repend from Allah and correct your wrong writing. May Allah guide us to learn Rasheed from pure sources to protect us from statements of shirk.

    ReplyDelete

Powered by Blogger.