றோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை, கண்டித்து இலங்கையில் இன்றும் ஆர்ப்பாட்டம்
(எம்.எம்.ஜபீர்)
மியன்மார் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கொலைகளை கண்டித்து இன்று நற்பிட்டிமுனையில் ஜூம்மா தொழுகையை தொடாந்து கண்டனப் பேரணி இடம்பெற்றது.
நற்பிட்டிமுனை ஜூம்மா பள்ளவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு சுலோகங்களை ஏந்திக் கொண்டு கண்டனப் பேரணி பள்ளிவாசல் முன்றலிலிருந்து ஆரம்பமாகி கல்முனை பிரதான வீதி ஊடாக நற்பிட்டிமுனை சந்தியை வந்தடைந்தது.
மியன்மார்தூதரகம், ஐக்கியநாடுகள் சபை, நாட்டின் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர்களிற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு கல்முனை பிரதேச செயலகம் சார்பாக காணக்காளர் யு.எல்.ஜவாஹிரிடம் நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவரினால் மகஜர் கையளிக்கப்பட்டது.
Post a Comment