Header Ads



களுத்துறையில் விசித்திரமாக பறந்த ஹெலிகொப்டர் - அச்சமடைந்த மக்கள்


இலங்கையின் தென்பகுதியில் விசித்திரமான முறையில் பறந்த ஹெலிகொப்டரில் பரபரப்பான நிலை காணப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

களுத்துறை, பாத்தகட பிரதேச வானில் மேலதிக இயந்திரத்துடன் ஹெலிகொப்டர் பறந்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மேலதிக இயந்திரத்தை பொருத்தி நேற்று பாத்தகட பிரதேச வானில் இந்த ஹெலிகொப்டர் பறந்துள்ளது.

இது புதையல் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பிரதேசத்தினுள் நிலத்தடி சுரங்கங்கள் எங்குள்ளது என்பது தொடர்பில் கண்கானிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்கானிப்பிற்கு அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்காமையினால் இந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.