பிரதேச சபையின் பெயரில், போலி பேஸ்புக் - ஆபாச செய்திகளும் பதிவேற்றம்
பேஸ்புக் போன்ற போலிக் கணக்கு ஒன்றைத் திறந்து அதில் அரசியல்சார் விரோத செய்திகள் மற்றும் இளைஞர், யுவதிகளை பாதிக்கும் ஆபாசச் செய்திகளை பதிவேற்றம் செய்யும் மோசடி நடவடிக்கை வெளியாகியுள்ளதாக பதுளை குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரிடம் பிரதேச சபையின் செயலாளர் டி.ஏ. தனபாலவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதுளை பிரதேச சபையின் உத்தியோகபூர்வ பேஸ் புக் போன்று இனந்தெரியாத நபர் ஒருவரினால் செயற்படுத்தப்பட்டு பிரதேச சபையின் சின்னம் அதில் பொறிக்கப்பட்டு அதன் பின்னால் மலர் ஒன்று வரையப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பாக குற்றவியல் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று கடந்த 9 ½ மாதகாலப் பகுதியில் பேஸ்புக் தொடர்பான 2200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் பிரதான கணனி தொழில்நுட்ப தகவல் பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகளில் 60 சத வீதமானவை பெண்களிடமிருந்து கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை 011 – 2691692 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியுமென்றும் தொழில் நுட்ப பிரிவு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
(லெ. மகராஜன்)
Post a Comment