Header Ads



அரபு லீக் கூட்டத்தில், தவிர்க்கப்பட்ட கட்டார் விவகாரம்

கட்டார் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதை, அந்நாடுகளின் இராஜதந்திரிகள் தவிர்த்துள்ளனர்.

அரபு லீக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், அக்கூட்டத்தில் கட்டார் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை தொடர்பில் சூடான வாக்குவாதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சூடான வாக்குவாதங்கள் தேவையற்றது என்பதுடன், அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கூறப்பட்ட நிலையில், சூடான வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் கூட்ட நிகழ்ச்சிநிரல் கொண்டிருக்கவில்லை. ஆகையால், தனது தொடக்க உரையில் கட்டார் – சவூதி அரேபிய நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தை முன்வைப்பதற்கு கட்டார் வெளிவிவகார அமைச்சர் சுல்தான் பின் ஸாட் அல் முராக்கி தவிர்த்துள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கட்டார் பயங்கரவாதத்துக்கு உதவி அளிப்பதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கடந்த ஜுன் 5ஆம் திகதி கட்டாருடனான தமது இராஜதந்திர உறவை முறித்துக்கொண்டன.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை கட்டார் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.