Header Ads



யாழ்ப்பாணம் நாவலர் வீதியில், ஒருவர் அடித்துக் கொலை - பூசகர் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் நாவலர் வீதியை சேர்ந்த நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த பூசகர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பூசகரின் மகன் ஒருவருர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இரு மகன்மார்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரை நேற்று இரவு குறித்த பூசகரின் மூன்று மகன்மார்களே அழைத்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, யாழ். மாநகர சபைக்கு பின்னால் அமைந்துள்ள பன்டிக்குட்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஆலயத்தின் பூசகர் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.