Header Ads



சுதந்திரக் கட்சியின் ஆண்டுவிழாவில் மதுவுக்கும், போதைக்கும் தடை..!!

“பொரளை கெம்பல் மைதானத்தில் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்து விட்டன” என்று, அக்கட்சி அறிவித்துள்ளது.   

“அந்த விழா இடம்பெறும், பூமிக்குள் போதையில் மற்றும் போதையூட்டும் பொருட்களை எடுத்துக்கொண்டு வரும் எவருமே அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.   

இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்துவதை குறைத்து, கூடியவரையிலும், தனியார் பஸ்களைப் பயன்படுத்துமாறு, கட்சியின் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.    

1 comment:

Powered by Blogger.