கிரிக்கெட்டை இனி, அதிகம் மிஸ் செய்வேன் - சங்ககாரா
கிரிக்கெட்டை அதிகமாக மிஸ் செய்வேன் என முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற குமார் சங்ககாரா கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் சங்ககாரா முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
நேற்று கடைசியாக Surrey அணிக்காக விளையாடிய சங்ககாரா 35 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
பேட்டிங் முடிந்து சங்ககாரா ஓய்வறைக்கு திரும்பும் போது சகவீரர்கள் கைத்தட்டி அவரை வரவேற்றனர்.
இதுவரை மொத்தம் 260 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா 20911 ஓட்டங்கள் குவித்துள்ளார், இதில் 64 சதங்கள் அடங்கும்.
போட்டிக்கு பின்னர் சங்ககாரா கூறுகையில், கிரிக்கெட்டை இனி அதிகம் மிஸ் செய்வேன் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என கருதுகிறேன், நான் இதுவரை விளையாடிய விதத்தை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
முதல்தர டெஸ்ட் போட்டியிலிருந்து சங்ககாரா ஓய்வுபெற்று விட்டாலும், அடுத்தாண்டு வெளிநாடுகளில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் அவர் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment