Header Ads



"பீல்ட்மார்ஷல் பொன்சேகாவினால், இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முடியும்"

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய அவரால் இராணுவ ஆட்சியை கூட ஏற்படுத்த முடியும் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் நிரந்தர உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா சீருடை அணிகிறார். அவர் ஒரு பீல்ட் மார்ஷல். அவர் இன்னும் பீல்ட் மார்ஷலுக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தவில்லை.

அவர் இராணுவத்தின் நிரந்தர உறுப்பினர் என்பதால், இராணுவத்துடன் தொடர்புகள் உள்ளன.

உத்தரவிடும் அதிகாரங்கள் உள்ளன. நிரந்தரமாக இராணுவத்துடன் தொடர்புகளை கொண்டிருந்த ஹிட்லர் எப்படி ஆட்சியை கைப்பற்றினார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக கட்டயாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.