Header Ads



ஆங்சாங் சூசி, "மணலில் தலையை புதைத்துள்ளார்" - ஆம்னெஸ்டி குற்றச்சாட்டு

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம் குறித்து, அதிகப்படியான சர்வதேச அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார்.

செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், மியான்மரின் தலைவர், உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும், ராணுவத்தின் மீது எந்த பழியும் கூறவோ, இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தோ பேசவில்லை.

அவரின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக, பல தலைவர்களும், தூதர்களும் கூறியுள்ளனர்.

ஆங் சாங் சூசியின் பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், அவரின் பேச்சு, "பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும், உண்மையற்றதாகவும் கலந்து இருந்தது" என்றுள்ளதோடு, ராணுவ அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல், ஆங் சாங் சூசி, "மணலில் தலையை புதைத்துள்ளார்" என குற்றம்சாட்டியுள்ளது.

பல ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரத்தில் இருந்த மியான்மரை, அதில் இருந்து வெளிகொண்டுவர போராடியதற்காக, 1990 ஆம் ஆண்டு, ஆங் சாங் சூசி , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அவர் இன்னும் மியான்மரில் மிகவும் பிரபலமானவராகவே உள்ளார்.

No comments

Powered by Blogger.