Header Ads



உடல்களிலிருந்து அகற்றப்படும், மர்ம புழுக்கள் - தம்புள்ளை மக்களிடம் அச்சம் பீடிப்பு

தம்புள்ளை பிரதேச மக்களின் உடல்களிலிருந்து அகற்றப்படும் மர்ம புழுக்கள் காரணமாக அப்பிரதேசத்தில் கடும் அச்சநிலை தோன்றியுள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் அண்மையில் மர்ம புழுக்கள் காரணமாக பெரும் அவதியுறத் தொடங்கியுள்ளனர்.

உடலின் ஏதாவது ஒரு இடத்தில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் இந்தப் புழுக்கள் 3-5 அங்குலம் வரை வளர்ச்சியடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இது வௌ்ளை நிறத்திலேயே காணப்படுகின்றது.

உடலின் பல்வேறு பாகங்களில் கூடு கட்டி வாழும் இந்தப் புழுக்கள் காரணமாக மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் என்பன கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைக்கு 20 பேரின் உடல்களிலிருந்து சத்திர சிகிச்சை மூலம் புழுக்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் காரணமாக தம்புள்ளை பிரதேச பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளது.

No comments

Powered by Blogger.