Header Ads



இருபத்தொரு பேரும் தந்த வடு...


துரோகிகளே!
எதற்காக வாக்களித்தீர்கள்!
மரம் மரம் என்று
அதற்கு 
உரமாய்க் கிடந்தோமே 
மறந்துவிட்டு வாக்களித்தீரோ!

மயிலே!
இந்த மரகதத்தீவிற்கு 
நீ
வரமாய் வந்தவன் என்று
அரணாய் நின்றோமே 
அதை மறந்து வாக்களித்தாயோ!

விகிதாசாரத்தில் 
வீதிக்கொரு MP கண்டோம் 
நாளை 
தொகுதி முறைக்குள் சிக்கி
எம் சமூகம் 
தோத்துப்போவதற்கா வாக்களித்தீர்!

எல்லை நிர்ணயம் 
எங்களுக்கு சார்பில்லாவிடின்
கொள்ளை போனாலும் 
கையுயர்த்த மாட்டோம்
என்கிறீர்!

புத்தியற்ற பூதங்களே!
புத்தனுக்கு சார்பாக 
எல்லை நிர்ணய 
பத்திரங்கள் சேர்கயிலே
புத்துயிர் பெற்றவர்கள் 
உம்மை 
குற்றுயிரில் வீசும் நாள்
வெகு தூரத்தில் 
இல்லையடா!

Rifnas Yoosuff

3 comments:

  1. வருங்கால மியன்மார்

    ReplyDelete
  2. This is a conspiracy by the two big parties UNP & SLFP. Small parties will not get seats as they did before. Only major parties will get seats in the election.

    ReplyDelete
  3. இந்த தேர்தல் முறைமை வரலாற்று ரீதியான தமிழர் தாயகத்திற்கு நீதியானது.
    வடக்கு கிழக்கில் 29 பாராளுமன்ற ஆசனங்களில் 16 தமிழருக்கும் 9முஸ்லீமுக்கும் 4 சிங்களருக்கும் mp ஆக உள்ளனர்.இது மிக பெரும் அநீதியாகும்.
    சனத்தெகை 67% உம் நிலப்பரப்பு 74% ஆளுகையும் வடகிழக்கில் உள்ள தமிழருக்கு நீதியாக 70% ஆசனம் கிடைத்திருக்க வேண்டும் அதாவது 29 ஆசனங்களில் 20 தமிழருக்கும் 6 முஸ்லீமுக்கும் 3சிங்களருக்கும் ஒதுக்கப்பட. வேண்டும்.கள்ளத்தனமான தேர்தல் முறை ஒழிய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.