Header Ads



மைத்திரிபால மீது, இப்படியும் ஒரு குற்றச்சாட்டு

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த போது பொலன்நறுவை மாவட்டத்தை சேர்ந்த பௌத்த பக்தர்களுக்கு தனது புகைப்படங்களை பொதிகளில் இட்டு வழங்கியதாக தேச விடுதலை மக்கள் கட்சியின் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் புகைப்படத்துடன் சில் துணிகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சில் துணிகளை விநியோகிக்கும் பணிகளில் பிரதேச மட்ட அரசியல்வாதிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த கூட்டு முடிவுக்கு அமைய சில் துணிகள் விநியோகிக்கப்பட்டதால் அது தவறு என்றால், மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன உட்பட அன்றைய அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்மரங்சி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.