நாங்கள் அமைதியாக இருந்தால், ஏன் சத்தத்தை காணவில்லை எனக் கேட்கின்றார்கள் - ஞானசார
முஸ்லிம்களுடன் சிங்களவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதனையே முஸ்லிம் தலைவர்கள் விரும்புவதாகவும் அவர்கள் அந்தப் பிரச்சினைகளைக் கொண்டு அரசியல் இலாபத்தைத் தேடுவதுடன் தூதரகங்களினூடாக பணத்தை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கையெடுப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிக் கதைக்கும் போது சிலருக்கு உற்சாகம் வருகின்றது.
நாங்கள் அமைதியாக இருந்தால் ஏன் சத்தத்தை காணவில்லை எனக் கேட்கின்றார்கள். நாங்கள் சத்தம் போட்டால் அது முஸ்லிம் தலைவர்மாருக்கு கொண்டாட்டமாக இருக்கின்றது. முஸ்லிம்களுடன் சிங்களவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதனையே முஸ்லிம் தலைவர்கள் விரும்புகின்றார்கள்.
ஏனென்றால் அவர்கள் முஸ்லிம் மக்களிடம், நாங்கள் தான் உங்களுக்காக கதைக்கின்றோம். நாங்கள் பொதுபல சேனாவுடனேயே மோதுகின்றோம் எனக் கூறி அரசியலை மேற்கொள்வதுடன் வெளிநாடுகளின் தூதரகங்களினூடாக பணத்தையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கின்றனர். இதுவே அவர்களின் அரசியல் என்றார்.
Unda sootha illa illa waya moodu...
ReplyDeleteWhat is this comment??????????????????????????????????????????
ReplyDelete