Header Ads



"தேனீர், டீ அப்பம், சோற்றுப் பொதி" விலைகள் கிடுகிடு என உயர்வு

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், உணவுகளின் விலைகளையும் நாளை முதல் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் தேனீரின் விலை 20 ரூபாவாகவும், பால் தேனீரின் விலை 40 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இதனை தவிர அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாகவும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த விலை அதிகரிப்பு குறித்து நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.