இலங்கையின் மிக நீளமான தந்தம்கொண்ட யானைக்கு, வரலாற்றில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்
தற்போது இலங்கையிலுள்ள என்ற ஆண் யானையின் பிறப்புறுப்பின் ஒருபகுதியை முதலையொன்று கடித்துத் துண்டாக்கியதன் காரணமாக குறித்த யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அர்ஜுன' என்ற இந்த யானை நேற்று -05- முன்தினம் பிற்பகல் யால தேசிய பூங்காவில் சித்துல்பவ்வவுக்கு அண்மையில் குளமொன்றினுள் இறங்கிய வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானையின் பிறப்புறுப்பை முதலையொன்று கடித்தமை இலங்கை வரலாற்றிலேயே இதுவே முதற் தடவையென சிரேஷ்ட வனஜீவராசிகள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடியுண்டதையடுத்து இந்த யானை பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்தவாறே வேதனையில் வனப்பகுதி முழுவதும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஊவா வனஜீவராசிகள் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட மிருக வைத்தியர் ஆனந்த தர்ம கீர்த்தி தலைமையிலான இரு குழுவினர் யானையை பிடித்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிகிச்சையளிப்பதற்காக நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Post a Comment