Header Ads



டுபாய்க்கு 88 மில்லியனை கொண்டுசென்ற, இளம்ஜோடி கட்டுநாயக்காவில் கைது

பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணும் என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஜோடியிடமிருந்து சுமார் 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது, சுங்க அதிகாரிகள், விசாரணை, நாணயத்தாள், சுங்க அதிகாரிகள்

No comments

Powered by Blogger.