800 குழந்தைகளுடன் IS தீவிரவாதிகளின் 500 மனைவிமாரை நாடுகடத்த திட்டம்
ஈராக்கில் 800 குழந்தைகளுடன் பிடிபட்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) களின் 500 மனைவிமார்களை நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஈராக்கில் ஐ.எஸ் கோட்டையாக இருந்த மொசூல் நகரை அந்நாட்டு படைகள் கடந்த ஜூலையில் கைப்பற்றிய பின் அங்கு பிடிபட்ட இந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தால் கைப் மையத்தில் ஈராக்கிய பாதுகாப்பு படைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு இந்த விடயம் பற்றி விசாரணைகளுக்கு பின் இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று நின்வேஹ் மாகாண கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நாடுகளின் 509 பெண்கள் மற்றும் 813 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஈராக்கின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் சுமார் 300 பேர் வரை துருக்கி நாட்டவர்கள் என்று அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment