7 நாட்களேயான குழந்தையை, கடித்துக்கொன்ற நாய் - பொலன்னறுவையில் அதிர்ச்சி
பிறந்து ஒருவாரமேயான பச்சிளம் குழந்தையொன்று நாய் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பொலன்னறுவையில் நேற்று பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் ஹபரணை, நாமல்புர பிரதேசத்தில் இந்த துக்க சம்பவம் நடைபெற்றுள்ளது.
இப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் பிறந்து ஏழு நாட்களே ஆகியிருந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்துள்ளது.
இதன்போது அயலவர்களினால் வளர்க்கப்பட்ட நாயொன்று வீட்டினுள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துள்ளது.
நாய்க்கடிக்கு இலக்கான குழந்தை படுகாயமடைந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் உறவினர்கள் உடனடியாக குழந்தையை ஹபரணை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அங்கிருந்து தம்புள்ளை பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
Post a Comment