65 பெண்களை ஏமாற்றி 10 கோடி ரூபாவை, மோசடி செய்தவர் பொலிஸாரிடம் சிக்கினார்
நாட்டின் பல பகுதிகளிலும் 65 பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
குறித்த நபருக்கு முன்னதாகவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நலையில், கம்பஹா யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நபர்களுடன் நெருக்கமாக பழகி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மிகவும் தந்திரமான முறையில் பல வருடங்களாக இந்த நபர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காலி - ஹினிதும, நெவசிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கார்தி ஹேவகே அருணகுமார என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தெரியவந்துள்ள சம்பவங்களின் அடிப்படையில் சந்தேகநபர் 65 பெண்களை பல வழிகளில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளார்.
இந்த பெண்களில் திருமணமானவர் மற்றும் திருமணமாகாத பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களில் 40 பெண்களிடம் இந்த சந்தேகநபர் பாலியல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment