Header Ads



5 வயது சிறுவன், இப்படியும் செய்தான்..!

கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக பொலி­ஸாரால் தேடப்­பட்ட பிள்ளை ஒன்று தனது சொந்த வீட்­டி­லேயே நூத­ன­மாக ஒளிந்­தி­ருந்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாதம்பை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

மாதம்பே, புளி­யன்­க­ட­வர, வெல்­பொ­துவெ பிர­தே­சத்தை சேர்ந்த ஐந்து வய­தான இச்­சி­று­வனை முன்­பள்­ளிக்கு அழைத்து செல்­வ­தற்­காக அவ­ரது பெற்றோர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளனர். சிறிது நேரத்தின் பின்னர் முன்­பள்­ளிக்கு அழைத்துச் செல்ல தயா­ரான போது பிள்ளை காணாமல் போயி­ருந்­த­மையால் அவ­ரது பெற்றோர் வீடு முழு­வதும் தேடிப்­பார்த்­துள்­ளனர்.

அதன்­போது, வீட்­டுக்கு அரு­கி­லுள்ள வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த லொறி­யொன்று அவ்­வ­ழி­யாக வேக­மாக பய­ணித்­தி­ருந்­த­மையால் அந்த லொறியில் பிள்ளை கடத்­தப்­பட்­டுள்­ள­தாக எண்ணி  பிள்­ளையின் பெற்றோர் 119 அவ­சர பொலிஸ் பிரி­வுக்கு அழைப்பு விடுத்து தமது பிள்ளை கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, பிள்ளை கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் லொறியை பின்­தொ­டர்­வ­தற்கு  இரு மோட்டார் சைக்­கிளில் பொலிஸார் புறப்­பட்டு சென்ற அதே­வேளை, மேலும் சில பொலிஸார் பிள்­ளையின் வீட்­டுக்கு சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

குழந்­தையின் பெற்­றோ­ரிடம் வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொண்ட பொலிஸார், வீட்டின் சுற்­றுப்­பு­றத்தில் தேடு­தலை மேற்­கொண்­ட­துடன் வீட்­டிக்கு உட்­பு­றத்­திலும் தேடி­யுள்­ளனர்.

அதன்­போது, காணாமல் போன­தாக கூறப்­பட்ட பிள்ளை வீட்­டி­லி­ருந்த சலவை இயந்­தி­ரத்­தினுள் அமர்ந்­தி­ருப்­ப­தனை கண்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரொ­ருவர் இயந்­தி­ரத்தின் கதவை திறந்­துள்ளார்.

அதனுள் வியர்வை வழிந்த முகத்­தோடு மிகவும் சிர­மத்­துடன் அமர்ந்து கொண்­டி­ருந்த பிள்­ளையை பொலிஸார் மீட்­டனர். பிள்­ளையின் புத்­த­கப்­பையும் சலவை இயந்­தி­ரத்­தி­னுள்­ளேயே இருந்­துள்­ளது.

பிள்­ளை­யிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது, தனக்கு முன்­பள்­ளிக்கு செல்­வ­தற்கு விருப்பம் இல்­லை­யெ­னவும், அதற்­கா­கவே தான் சலவை இயந்­தி­ரத்­தினுள் ஒளிந்­து­கொண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

இப்­பிள்ளை சுமார் 1 மணித்­தி­யா­ல­மாக சலவை இயந்­தி­ரத்­தினுள் இருந்­துள்­ள­தா­கவும், இன்னும் சற்­று­நேரம் அவர் அவ்­வாறே இருந்­தி­ருந்தால் உயி­ரா­பத்து ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், வீட்­டி­லி­ருந்த பிள்­ளையை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக சிலாபம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் வஸந்த ஹேரத், சிலாம் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி சுரங்க தஹநாயக்க மற்றும் மாதம்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வஸந்த குமார ஆகியோர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.