பாராளுமன்றத்தில் இன்று 3 முக்கிய சட்டமூலங்கள் வருகிறது
இன்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விஷேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமுலங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அதன்படி மாநகர சபை கட்டளைச் சட்டம், நகரசபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேசசபை கட்டளைச் சட்டம் என்பவை இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
இன்று மூன்று சட்டமூலங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒக்ேடாபர் மாதம் 09ம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
குறித்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.
Post a Comment