3 வருடங்களாக சிறுவனின் தலையில் துப்பாக்கி ரவை
-JM-HAFEEZ-
மூன்று வருடமாக சிறுவன் ஒருவனின் தலைப் பகுதியில் காணப்பட்ட துப்பாக்கி ரவை ஒன்றை பேராதனை வைத்தியசாலை டாக்டர்கள் மிக வெற்றிகரமான சத்திரசிகிச்சை ஒன்றின் மூலம் அகற்றியுள்ளனர்.
இது குறித்து, வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கே. ஹேரத் தெரிவிக்கையில்,-
விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் குரங்குகளை விரட்டுவதற்காகப் பயன் படுத்தப்படும் ஒருவகை ரைபிள் தொழிற்பட்டதால் அதிலிருந்து பாய்ந்த ரவை மேற்படி சிறுவனின் தலையைத் தாக்கியுள்ளது.
மேற்படி சிறுவனை கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்து ஆரம்பக் கட்ட சிகிச்சைகளை வழங்கி பின்னர் பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பினர்.
அவ்வைத்தியசாலையில் காது, மூக்கு, தொண்டை வைத்தியர் (ஈ.என்.டி)சிசிர பண்டார எதுல்கம உட்பட வைத்திய குழுவினர் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
காதுக்கு சமீபமாக தலைப் பகுதியில் மண்டையோட்டுக்கு அண்மித்து காணப்பட்ட ரவையை வெளியே எடுத்தனர். ஆனால் மண்டையோட்டுக்கு எதுவித ஆபத்துமில்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மருத்துவர்கள் ஆபத்தான பொருட்களை சிறுவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அவ்வாறு செயற்படாத காரணத்தால் ஏற்பட்ட ஒரு விபரீதம் இது எனவும் தெரிவித்தனர்.
Post a Comment